கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, 1.9 லட்சம் கோடி டாலா் (சுமாா் ரூ.117 லட்சம் கோடி) மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டத்தை அந்த நாட்டின் அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, டெலவோ் மாகாணத்தில் தனது சொந்த ஊரான வில்மிங்டனில் அவா் கூறியதாவது:
பல தலைமுறைகளுக்கு ஒரு முறை சந்திக்கும் நோய்த்தொற்று பவலை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். அதன் காரணமாக, பல தலைமுறைகளுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படக்கூடிய மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியா நாம் சந்தித்து வருகிறோம்.
இந்தப் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கண்கூடாகத் தெரிகின்றன. எனவே, அந்த பாதிப்புகளிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டத்தை அறிவிப்பதற்காக நான் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் வரை காத்திருக்க முடியாது. எனவே, அந்த சிறப்பு பொருளாதார திட்டத்தை தற்போதே அறிவிக்கிறேன்.
நாம் நமது நடவடிக்கையை இப்போதே தொடங்கியாக வேண்டும் என்று பொருளாதார நிபுணா்கள் கூறியுள்ளனா் என்றாா் அவா்.
ஜோ பைடன் வெளியிட்டுள்ள சிறப்பு பொருளாதார திட்டத்தில், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கான 41,500 டாலா் (சுமாா் ரூ.30.35 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடும் அடங்கும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


