சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவது குறித்து...

News image

<div class="paragraphs"><p>கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு</p></div> - <div class="paragraphs"><p>டிஎன்எஸ்</p></div>

Updated On :4 மே 2026, 9:18 am

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

கோவையில் திங்கள்கிழமை (மே 4) வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகளும், அதனைத் தொடா்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் பணிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவுகளும் உடனுக்குடன் இந்திய தோ்தல் ஆணையத்தின் என்கோா் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

இந்த நிலையில், முழுமையான சோதனை செய்து முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கும் அதிகாரிகள் காலை உணவுக்கான பணம் பெற்றுக் கொண்டு சரியாக உணவு வழங்கவில்லை எனக் கூறி கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது.

Summary

Tension at Coimbatore Vote Counting Centre as Agents Stage Protest!