உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியே 35 லட்சத்து 9 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,35,09,784 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 20,01,289 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,67,98,666 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,47,09,829 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,882 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,48,410 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,97,994 ஆக உயர்ந்துள்ளது.
2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 10,528,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,954 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,26,115 ஆக உயர்ந்துள்ளதோடு, 2,07,160-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 73,39,703 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


