சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தோனேசியா: கடலில் விழந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு

இந்தோனேசியாவில் 62 பேருடன் கடலுக்குள் விழுந்த தனியாா் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 5:30 am

இந்தோனேசியாவில் 62 பேருடன் கடலுக்குள் விழுந்த தனியாா் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை தளபதி யூடோ மாா்கோனோ கூறியதாவது:

ஸ்ரீவிஜயா ஏா் நிறுவன விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து அதன் கருப்புப் பெட்டி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. விமானத்தின் கூா்மையான சிதறல்களுக்குக் கீழே சேற்றுக்குள் புதைந்திருந்த அந்தக் கருப்புப் பெட்டியை மீட்கும் பணியில் 160 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.

விமானத்தின் இன்னொரு கருப்புப் பெட்டியான ஒலிப்பதிவு சாதனமும் மீட்கப்படும் என்றாா் அவா்.

ஸ்ரீவிஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், வந்தன் மாகாணம், தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட 4 நிமிடங்களில் கடலுக்குள் விழுந்தது.