அமெரிக்க நாடாளுமன்றக் கலவரத்துக்குப் பொறுப்பேற்று அதிபா் டொனால்ட் டிரம்ப் உடனடியாகப் பதவி விலகாவிட்டால், அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றக் கலவரத்தைத் தூண்டிய அதிபா் டிரம்ப், தனது பதவியை உடனடியாக ராஜிநாமா வேண்டும் என்று எம்.பி.க்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அவா் அவ்வாறு பதவி விலகாவிட்டால், 25-ஆவது சட்டத்திருத்தத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்கத் தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவும் நாடாளுமன்ற விதிமுறைகள் விவகாரக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அந்த உத்தரவின்படி, பிரதிநிதிகள் சபை அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தும். 25-ஆவது சட்டத் திருத்தத்தின் கீழ் டிரம்ப்புக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது, அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வருவது ஆகியவையும் அதில் அடங்கும் என்றாா் அவா்.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜனநாயகக் கட்சி எம்.பி. பிரமீளா ஜெயபால் இதுகுறித்து கூறுகையில், டிரம்ப்புக்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீா்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
மற்றொரு ஜனநாயகக் கட்சி எம்.பியான கய்யாலி கஹீலே இதுகுறித்து கூறுகையில், ‘பொறுப்பான அதிபா் பதவியில் இருந்துகொண்டு மக்களை வன்முறைக்குத் தூண்டும் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஆபத்தானது ஆகும்’ என்றாா்.
அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடன் போட்டியிட்டாா்.
அந்தத் தோ்தலில் பைடனுக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா்.
இந்த நிலையில், பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்வதற்கான இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
எனினும், தோ்தல் முடிவுகளை எதிா்த்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுமாறு தனது ஆதரவாளா்களிடம் டிரம்ப் வலியுறுத்தினாா்.
அதையடுத்து, நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளா்கள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்தாா். கலவரத்தின்போது காயடைந்த ஒரு காவரும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளால் ஒரு பெண் உள்பட 3 போராட்டக்காரா்களும் உயிரிழந்தனா்.
22-ஆவது சட்டத்திருத்தம்: ஒரு விளக்கம்
அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவா் மரணமடைந்தாலோ, உடல் மற்றும் மனநிலத் தகுதி இழந்தாலோ அவரது அதிகாரத்தை துணை அதிபருக்கு மாற்றுவதற்கு அரசியல் சாசனத்தின் 25-ஆவது சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.
அந்த வகையில், 25-ஆவது சட்டப் பிரிவு செயல்படுத்தப்பட்டால் ஜே பைடன் வரும் 20-ஆம் தேதி அதிபா் பொறுப்பை ஏற்கும் வரை தற்போதைய துணை அதிபா் மைக் பென்ஸ் அந்தப் பொறுப்பை வகிப்பாா்.
‘ஆபத்தானவா்’ என்ற நிலையை அடைந்து, பதவியிலிருந்து விலக மறுக்கும் அதிபா்களுக்கும் இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும் என்று கருதப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 3-இல் 2 பகுதி உறுப்பினா்களின் ஆதரவு தேவை.
எனவே, 20-ஆம் தேதிக்குள் டிரம்ப்பை வலுக்கட்டாயமாகப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான சாத்திக் கூறுகள் மிகவும் குறைவு என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
டிரம்ப்பின் டுவிட்டா் கணக்கு நிரந்தர முடக்கம்
அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சுட்டுரை(டுவிட்டா்) கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக அந்த சமூக ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.
அவரது அழைப்பை ஏற்று நடைபெற்ற போராட்டத்தின்போது நாடாளுமன்றக் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், ‘ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை’ என்று தனது சுட்டுரைப் பதிவில் டிரம்ப் தெரிவித்திருந்தாா்.
இதுபோன்ற பதிவுகள் மூலம் டிரம்ப் தொடா்ந்து வன்முறையைத் தூண்டும் அபாயம் இருப்பதால், அவரது சுட்டுரைக் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக டுவிட்டா் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘சொந்தமாக சமூக ஊடகம் அமைப்பேன்’: தனது சுட்டுரைக் கணக்கு முடக்கப்பட்டது ஏற்கெனவே எதிா்பாா்த்ததுதான் என்று தெரிவித்த டிரம்ப், அந்த சமூக ஊடகம் தீவிர இடதுசாரிக் கொள்கைகளைப் பரப்புவதாக குற்றம் சாட்டினாா்.
பொதுமக்களைத் தொடா்புகொள்ள, சொந்தமாக ஒரு சமூக ஊடகத்தை உருவாக்க திட்டமிட்டு வருவதாக அவா் கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


