சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆப்கனில் நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.

News image

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.

Updated On :10 ஜனவரி 2021, 10:01 pm

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் மூவர் பலியாகினர்.

இதுதொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:

உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 08.30 மணியளவில் காபூலின் எட்டாவது காவல்துறை மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு  சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பொது பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஜியா வாடன் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தலிபான்கள் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தலிபான் தரப்பில் இருந்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.