பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
புதியவகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல் பிரிட்டன் - இந்தியா இடையிலான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே 15 நாள்களுக்கு பிறகு மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவி வந்ததன் எதிரொலியாக அந்நாட்டுடனான விமான போக்குவரத்து சேவையை பல்வேறு நாடுகள் நிறுத்தி வைத்தன.
அந்தவகையில் இந்தியாவிலும் புதியவகை கரோனா பரவல் அதிகரித்து வந்ததால், பிரிட்டன் உடனான விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதனிடையே கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதற்காக ரூ.3,400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தடை உத்தரவுக்குப் பிறகு கடந்த 6-ஆம் தேதி தில்லி மற்றும் மும்பையிலிருந்து பிரிட்டனுக்கு புறப்பட்ட விமானங்கள் இன்று மீண்டும் இந்தியா வந்தடைந்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


