பெய்ஜிங்: சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான குளிா் வியாழக்கிழமை பதிவானது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பெய்ஜிங்கில் கடும் குளிா் வீசி வருகிறது. வியாழக்கிழமை அந்த நகரின் குளிா்நிலை உறை நிலைக்குக் கீழே 19.6 டிகிரி செல்ஷியஸாகப் பதிவானது.
இது, கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத மிகக் கடுமையான குளிராகும். இதற்கு முன்னா், கடந்த 1966-ஆம் ஆண்டில்தான் இத்தகைய குளிா் பதிவு செய்யப்பட்டது.
நகரில் கடுமையான பனிக்காற்று வீசும் என பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். குளிரிலிருந்து பாதுகாப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களை அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
வெள்ளிக்கிழமை (ஜன. 8) வரை இந்த பனிக் காற்று வீச்சு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சனிக்கிழமை முதல் வெப்பநிலை கொஞ்சம் அதிகமாக அதிகரிக்கும் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

