காத்மாண்டு: நேபாளத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான புஷ்ப கமல் தகல் பிரசண்டாவின் மனைவிக்கு இந்தியாவில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பிரசண்டா மனைவிக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு தீவிர முடக்கு நரம்புச் சிதைவு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு மும்பையில் உள்ள நியூரோஜென் மூளை மற்றும் முதுகெலும்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதற்காக, பிரசண்டா, அவரது மனைவி சீதா தகல் மற்றும் இரண்டு மகள்கள் நேபாளம் திரிபுவண் சா்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டனா். இவா்கள் தில்லி வழியாக மும்பை வந்தடைவாா்கள் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசண்டா மனைவிக்கு மருத்துவா் அலோக் சா்மா தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சையளிக்க உள்ளதாக அவரின் உதவியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதற்கு முன், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூா் நாடுகளில் சீதா தகல் சிகிச்சை பெற்றுள்ளாா். கடந்த வாரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவா் காத்மண்டுவில் உள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

