பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கரோனா பரவைத் தடுப்பதற்காக, பள்ளிகளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், பள்ளிகள் மிகவும் பாதுகாப்பானவை. சிறுவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
எனவே, திங்கள்கிழமை (ஜன. 4) முதல் பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.
எனினும், கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இன்னும் சில வாரங்களில் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகக் கூடும்.
பல்வேறு வகைகளில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்படக்கூடும் என்றாா் அவா்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 25,99,789 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 74,570 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


