ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
முகமது ஹசன் ரெஸாய் கடந்த 2007ஆம் ஆண்டில் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 17 வயதில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 30 வயதான ரெஸாய் 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி கொலைக் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ரெஸாய் கடுமையான சித்ரவதைகள் மூலம் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிவித்த ஐ.நா. அவை, சிறாராக கைது செய்யப்பட்டவரை தூக்கு தண்டனைக்கு உட்படுத்தியது பன்னாட்டு மனித உரிமைக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டு மட்டும் சிறார் வயதில் கைது செய்யப்பட்ட 4 பேர் இதுவரை ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் வரை ஈரானிய சிறைகளில் மரண தண்டனைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அவை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


