சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மெக்சிகோவில் நிலச்சரிவு: 3 குழந்தைகள் உள்பட 8 பேர் சாவு

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

Updated On :12 செப்டம்பர் 2013, 5:56 am

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் கிழக்கு மெக்சிகன் மாகாணத்தில் மன்ஜானாடிட்லா நகரில் திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பிரதேசமான இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகளை மண் மூடியது. அந்த வீடுகளில் வசித்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தகவலறிந்து அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மழை தொடர்வதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவனும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.