யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், ஷபவா மாகாணம், பல்ஹஃப் முனையத்துக்கு அருகே உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
காரில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்ஹஃப் முனையத்திலிருந்துதான் யேமனிலிருந்து வெளிநாடுகளுக்கு குழாய் வழியாக எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எரிவாயுக் குழாய்களை தாக்கவும் அல்-காய்தா பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர். அதேபோல், ஹத்ரமவட் மாகாணத்தில் உள்ள கனடாவின் மினல்-தபா எண்ணெய் முனையத்தை தாக்கி, ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாடி தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாற்காலிமாக மூடப்பட்டன. யேமனில் உள்ள தூதரகத்தைத் தவிர, மற்ற நாடுகளில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை திறந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

