ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே வெற்றிபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
முகாபேவை எதிர்த்து களமிறங்கிய மோர்கன் டிஸ்வான்கிராய்க்கும் அவரது ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்துக்கும் பலத்த தோல்வி என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதிபர் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இரண்டிலுமே எங்கள் கட்சிக்குத்தான் வெற்றி என்று முகாபேவின் ஜானு-பிஎப் கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதாகவும் அந்தந்த தொகுதி முடிவுகளை திரட்டிவருவதாகவும் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த தேர்தல் மோசடியானது, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தல் முடிவை நிராகரிக்கவேண்டும் என முகாபேவை எதிர்த்து போட்டியிட்ட மோர்கன் டிஸ்வான்கிராய் தெரிவித்தார்,
அதிபர் பதவிக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது.
33ஆண்டு காலமாக ஆட்சி புரியும் ராபர்ட் முகாபேவை (89) தோற்கடிக்க 3ஆம் முறையாக போட்டியிட்டார் டிஸ்வான்கிராய்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

