பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
கராச்சி மாநகராட்சி ஆணையரின் வாகனத்தை குறிவைத்து சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டை வைத்த பயங்கரவாதிகள், ஆணையரின் கார் அந்த வழியாக கடந்து சென்றபோது அதனை வெடிக்கச் செய்தனர். இதில் ஆணையருடன் பாதுகாப்புக்குச் சென்ற 8 போலீஸôர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குண்டு வெடித்தது. அங்குள்ள வீடு ஒன்றில் 4 பயங்கரவாதிகள், வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

