அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசுத் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை விற்ற இந்தியருக்கு ரூ.60 லட்சம் கமிஷன் கிடைக்க இருக்கிறது.
இந்தியரான கேரி படேல் (30) சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினார். பென்சில்வேனியா மாகாணத்தில் மதுபான கடை வைத்திருக்கும் இவர் லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்து வருகிறார்.
பென்சில்வேனியா லாட்டரியில் ஒருவருக்கு ரூ.789 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசுக்குரியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையே இந்த பரிசுத் தொகைக்கான லாட்டரி சீட்டை விற்றவருக்கு ரூ.60 லட்சம் கமிஷனாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பரிசுக்குரிய இந்த லாட்டரி சீட்டை (எண் 13-19-23-33-57) விற்றவர் படேல் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பட்டேலின் கடைக்கு திடீரென சென்ற பென்சில்வேனியா லாட்டரி நிறுவன அதிகாரி கிம் மோர்ஃபியா இதை உறுதி செய்துள்ளார்.
""மெகா பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாட்டரி சீட்டை நீங்கள் விற்பனை செய்துள்ளீர்கள். அதற்காக வாழ்த்துகள்'' என படேலிடன் கிம் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட படேல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். இந்த கமிஷன் தொகையை தனது கடை பணியாளர்கள் 3 பேருக்கு ஊக்கத் தொகையாக வழங்கப் போவதாக படேல் கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

