சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்தில் திருட்டு

தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Updated On :2 ஜூலை 2013, 9:52 am

தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து யான்ஹப் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:  கொரிய போர் தொடங்கியதன் நினைவுதினமான கடந்த புதன்கிழமை, வட மற்றும் தென் கொரியாவின் இணையதளங்கள் செயலிழந்தன. இந்நிலையில், தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் இணையதளத்தில் ஊடுருவி முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த இணையதளத்தைப் பின்தொடரும் சுமார் 1 லட்சம் பேரின் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.

இந்த தகவலை அதிபர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்துக்காக அதிபர் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.  இணையதள தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது.  கடந்த 1950-53ஆம் ஆண்டு வரை கொரிய போர் நடைபெற்றது. அதன் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

எனினும், மறைமுகமாக வட மற்றும் தென் கொரியா இடையே போர் தொடர்கதையாகவே உள்ளது.