தென்கொரிய அதிபர் அலுவலக இணையதளத்திலிருந்து முக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து யான்ஹப் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: கொரிய போர் தொடங்கியதன் நினைவுதினமான கடந்த புதன்கிழமை, வட மற்றும் தென் கொரியாவின் இணையதளங்கள் செயலிழந்தன. இந்நிலையில், தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் இணையதளத்தில் ஊடுருவி முக்கியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த இணையதளத்தைப் பின்தொடரும் சுமார் 1 லட்சம் பேரின் கணக்குகள் ஊடுருவப்பட்டுள்ளன.
இந்த தகவலை அதிபர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவத்துக்காக அதிபர் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இணையதள தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1950-53ஆம் ஆண்டு வரை கொரிய போர் நடைபெற்றது. அதன் பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
எனினும், மறைமுகமாக வட மற்றும் தென் கொரியா இடையே போர் தொடர்கதையாகவே உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

