இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்கக் கூடாது என பாகிஸ்தான் அரசுக்கு ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லாகூரை அடுத்த ஷேக்புராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சயீத் கலந்து கொண்டு பேசுகையில், ""பாகிஸ்தான் ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் இந்தியா, அதை பாகிஸ்தானுக்கே விற்கப் பார்க்கிறது.
இதை பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வதில்லை. இந்தியாவிடமிருந்து மின்சாரத்தை வாங்கக் கூடாது. அவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை'' என கூறியுள்ளார்.
கடுமையான மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து மின்சாரம் வாங்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துமாறு நீர் மற்றும் மின் துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிபுக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சயீத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

