சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாலத்தீவிடம் ரூ.7,700 கோடி நஷ்ட ஈடு கேட்கிறது ஜிஎம்ஆர்

விமான நிலைய கட்டுமானம், பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த மாலத்தீவு அரசிடம் ரூ.7,700 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது இந்திய கட்டுமான நிறுவனமான ஜிஎம்ஆர்.

Updated On :22 ஜூன் 2013, 4:52 am

விமான நிலைய கட்டுமானம், பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த மாலத்தீவு அரசிடம் ரூ.7,700 கோடி நஷ்டஈடு கேட்டுள்ளது இந்திய கட்டுமான நிறுவனமான ஜிஎம்ஆர்.

இது தொடர்பான மனு, சிங்கப்பூர் நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட 25 ஆண்டுகால ஒப்பந்தத்தை தவறான முறையில் மாலத்தீவு அரசு ரத்து செய்துவிட்டதாகவும் ஜிஎம்ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நம்பி தாங்கள் மேற்கொண்ட செலவுகள், பிற நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அதற்கு அளிக்க வேண்டிய நஷ்டஈடு என தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக சுமார் 75 பக்க அறிக்கையை நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் ஜிஎம்ஆர் தாக்கல் செய்துள்ளது.

மாலத்தீவு அதிபராக முகமது நஷீத் பதவி வகித்தபோது, மாலேயில் உள்ள சர்வதேச விமான நிலைய கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை ஜிஎம்ஆர் பெற்றது. ஆனால் முகமது வாஹித் மாலத்தீவு அதிபரான பின் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.