பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
பக்துன்கவா மாகாணம், பெஷாவரில் உள்ள குல்ஷன் காலனி ஹுசைனியா மதரஸôவில் வெள்ளிக்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்திருந்த பயங்கரவாதி, மதரஸôவுக்குள் புகுந்து அதை வெடிக்கச் செய்தார். இதில் 15 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலில் மதரஸô கட்டடம் கடும் சேதமடைந்தது. தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.
இத்தாக்குதலை அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் வன்மையாக கண்டித்துள்ளனர். ஜர்தாரி கூறுகையில், ""மிகவும் கோழைத்தனமான இது போன்ற செயல்களால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரை பலவீனப்படுத்திவிட முடியாது'' என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

