சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவலில் இந்திய இளைஞர் சாவு: போலீஸார் மீது குடும்பத்தார் புகார்

மலேசியாவில் துன்புறுத்தலின் காரணமாகத்தான் காவலில் வைக்கப்பட்டிருந்த என்.தமீந்திரன் (32) உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Updated On :2 ஜூன் 2013, 6:09 am

மலேசியாவில் துன்புறுத்தலின் காரணமாகத்தான் காவலில் வைக்கப்பட்டிருந்த என்.தமீந்திரன் (32) உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமீந்திரன் கடந்த 21-ம் தேதி கோலாலம்பூரில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸார் அடித்து துன்புறுத்தியதால்தான் தமீந்திரன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவரது மனைவி எம்.மேரி கூறுகையில், எனது கணவரின் மரணம் குறித்து விசாரிக்காமல், போலீஸார் எங்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். எங்கள் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை ஒரு போலீஸார் கூட கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.