யேமனில் அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் அல் காய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
யேமனில் அபியான் மாகாணத்தில் உள்ள மக்ஃபாதில் அல் காய்தா பயங்கரவாதிகள் முகாம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் யேமன் அரசுப் படையினர் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். இந்த 8 பேரும் மக்ஃபாத் பகுதியில் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மக்ஃபாத் பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த அல் காய்தாவினரை விரட்டியடிக்க 2012 மே மாதத்திலிருந்து யேமன் அரசு தாக்குதலை நடத்தி வருகிறது. யேமனின் இந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.
அப்பிராந்தியத்தில் அல் காய்தா பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிந்தால், அவர்கள் மீது ஆளில்லா விமானத்
தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தி வருகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

