சீனாவின் "இரும்புச் சகோதரன்' என்று பாகிஸ்தானை வர்ணித்துள்ளார் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு புதன்கிழமை பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் லீ கெகியாங் கூறியுள்ளதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிறது. இதனை சீனா பாராட்டுகிறது.
சர்வதேச சமூகமும் பாகிஸ்தானை ஆதரித்து, அதற்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும். பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி ஆகியவை மேம்பட சீனா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானுடன் பல ஆண்டுகாலமாக உள்ள நட்புறவு தொடரும். சீனாவின் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய நாடு பாகிஸ்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருநாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் லீ கெகியாங், அந்நாட்டு அதிபர் ஜர்தாரி, அடுத்து பிரதமராக உள்ள நவாஸ் ஷெரீப் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
இது தவிர ராணுவ தலைவர்கள், அரசியல் தலைவர்கள் பலரையும் லீ கெகியாங் சந்திக்கிறார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

