ஈரானின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 20 பேர் காயமடைந்தனர்.
நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது. மினாபத் நகருக்கு 85 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 36.44 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கிராமங்களில் நிலநடுக்கம் கடுமையாக ஏற்பட்டதாகவும், இதனால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹோர்முஸ்கன் மாகாண ஆளுநர் இப்ராஹிம் அஸிஸி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முதற்கட்டத் தகவலின்படி நிலநடுக்கத்தினால் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல வீடுகள் சேதமடைந்ததாக "மெர் செய்தி நிறுவனம்' தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகள் 4.1 முதல் 5.2 அலகுகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவாகின.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள அணு உலையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

