பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆர்ஜெண்டினா அதிபருக்கு அழைப்பு அனுப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்கரெட் தாட்சர் கடந்த திங்கள்கிழமை காலமானார். லண்டனில் உள்ள செயின்ட் பால் கதீட்ரல் தேவாலயத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 17) இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து 2000-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் டேவிட் கேமரூன் அலுவலகத்துடன் இணைந்து மார்கரெட் தாட்சர் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தின் பிரதிநிதி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜோஸ் மேனுவல் பாரோசோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரிட்டன் ராணியும், இளவரசரும் தாட்சரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

