வடகொரியாவின் புதிய பிரதமராக பாக் பாங்-ஜூ (74) நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கொரியா, அமெரிக்காவுடன் போர் நடத்த ஆயத்தமாகி வரும் சூழ்நிலையில், வடகொரியாவில் இந்த திடீர் நியமனம் நடந்துள்ளது. வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் அனைத்து அதிகாரத்தையும் வைத்துள்ளார்.
பிரதமர் பதவி, நாடாளுமன்றம் உள்ளிட்டவை அங்கு பெயரளவில்தான் செயல்பட்டு வருகின்றன. இப்போது பிரதமராக இருந்த சோய் யாங்-ரிம் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2003-07-ம் ஆண்டு வரை பாக் பாங்-ஜூ பிரதமராக இருந்தார். அப்போது அவர் மேற்கொண்ட சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கட்சியிலும், ராணுவத்திலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
திங்கள்கிழமை கூடிய வடகொரிய நாடாளுமன்றத்தின் முன்னிலையில் பாக் பாங்-ஜூ பதவியேற்றார். வடகொரியாவை அணுஆயுத நாடு என்று அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

