மலாவியின் தற்போதைய அதிபர் ஜோய்ஸ் பாண்டாவை பதவிக்கு வரவிடாமல் தடுக்க சதி செய்ததாக, 2 முன்னாள் அமைச்சர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான மலாவியின் அதிபராக இருந்த பிங்குவா முதாரிக்கா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். அவர் உயிரிழந்தது உடனடியாக மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
அடுத்த அதிபர் யார் என்பது குறித்து ரகசிய ஆலோசனை நடந்தது. அப்போதைய துணை அதிபர் ஜோய்ஸ் பாண்டா அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருந்தது. இதைத் தடுக்க, அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஹென்றி மூஸô, வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கோண்ட்வானி நன்கும்வா உள்ளிட்டோர் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பாண்டா அதிபராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அதிபராகப் பொறுப்பேற்க விடாமல் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூஸô மற்றும் கோண்ட்வானி இருவரும் போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"இக் கைது நடவடிக்கை எனக்கு எதிராகச் செயல்பட்டதால். நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று அதிபர் பாண்டா தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

