கிழக்கு தைமூர் நாட்டில் இருந்து ஐ.நா. அமைதிப்படை திங்கள்கிழமை முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டது.
கிழக்கு தைமூரில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஐ.நா. அமைதிப்படை படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. இறுதிக்கட்டமாக 2012ஆம் ஆண்டின் இறுதிநாளான திங்கள் கிழமை 1,500 அமைதிப்படை வீரர்கள் தைமூரில் இருந்து விடை பெற்றனர். "தைமூர் மக்களும், அதன் தலைவர்களும் இனிவரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்கு உள்நாட்டு போலீஸôர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, ஐ.நா. அமைதிப்படை திரும்பப் பெறப்பட்டுள்ளது' என்று தைமூருக்கான ஐ.நா. ஒருங்கிணைந்த திட்ட (யுஎன்எம்ஐடி) தலைவர் ஃபின் ரெஸ்கே நீல்சன் தெரிவித்தார்.
தென்கிழக்காசியக் கடலின் தென் பகுதியில் தைமூர் தீவு அமைந்துள்ளது. கிழக்கு தைமூர் தனி நாடாகவும், மேற்கு தைமூர் இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாகவும் அமைந்துள்ளன.
24 ஆண்டுகளாக இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் இருந்த கிழக்கு தைமூர், ஐ.நா. தலையீட்டால் பொது வாக்கெடுப்பு மூலம் 1999ஆம் ஆண்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. போர், வறுமை, நோய் உள்ளிட்டவற்றால் அக்காலகட்டத்தில் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

