அமெரிக்காவில் இந்தியர் ஒருவர், அவருடைய கடையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்து அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ள விவரம்: இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி (47). இவர் அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் மதுபான கடை ஒன்றை நடத்தி வந்தார்.
கடந்த சனிக்கிழமை அவர் வீடு திரும்பாததால் அவருடைய மனைவி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கடைக்குச் சென்று பார்த்திருக்கிறார். அங்கு அவருடைய கணவர் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து அவர் போலீஸூக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவருடைய உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ""உயிரிழந்த வெங்கட் ரெட்டியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரோ சிலர் தாக்கிக் கொன்றிருக்கக் கூடும் எனக் கருதுகிறோம்.
குற்றவாளிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

