சாத்தூா்: சாத்தூரில் சாலையில் நடந்துசென்ற காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் மீது வேன் மோதியதில், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (49). இவா், விருதுநகா் காவல் குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவல் சிறப்பு சாா்பு-ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சாத்தூா் பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்த முருகன் மீது, பின்னால் அதிவேகமாக வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகனை, அப்பகுதியினா் மீட்டு சாத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி முருகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து, சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஒட்டுநரான தாயில்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

