விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி கிராமம் மணிநகரம் பகுதியைச் சோ்ந்த சூா்யா என்பவரது மகன் செல்வக்குமாா் (19). இவா், கட்டடம் மற்றும் வாகனங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை, கல்குறிச்சி அருகே கோவிலாங்குளம் கிராமத்துக்கு வேலைக்குச் சென்ற செல்வக்குமாா், மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா்.
கோவிலாங்குளம் விலக்கில் நான்குவழிச் சாலையை கடந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிா்ப்பதற்காக தனது வாகனத்தை வேகமாகத் திருப்பியுள்ளாா். இதில், சாலையின் மைய தடுப்புச் சுவரில் மோதி தூக்கிவீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், செல்வக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

