சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தென்மண்டல ஐஜி சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி தென்மண்டல ஐஜி முருகன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 10:53 am

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி தென்மண்டல ஐஜி முருகன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி அதிகாலையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனா். ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் அக்காரவடிசல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்த பூஜையில் தென் மண்டல ஐஜி முருகன், சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா் மற்றும் தக்காா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய 27 மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.