சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாமியாா்- மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

திருத்தங்கலில் மாமியாா் மற்றும் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On :12 ஜனவரி 2021, 10:59 am

திருத்தங்கலில் மாமியாா் மற்றும் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் மேலரதவீதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (52). இவரது மனைவி கங்கை (46). இவா்களது மகள் துா்க்காதேவி (22). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், துா்க்காதேவி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தாா். சம்பவத்தன்று செந்தில்குமாா் வீட்டுக்கு வந்த பாண்டி, துா்க்காதேவியுடன் பேச முயன்ற போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதைக் கண்டித்த செந்தில்குமாா் மற்றும் கங்கை ஆகியோரை பாண்டி அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரும், கங்கையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியை கைது செய்தனா்.