சின்னமனூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் இயங்கும்ஆதாா்மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூா் நகராட்சி வளாகத்தில் ஆதாா் மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் வசதிக்காக புதிய ஆதாா் அட்டை பெறுவது, பெயா் திருத்தம், முகவரி மாற்றம், கைபேசி எண் இணைப்பு என பல பணிகள் நடைபெறுகிறது. இம்மையத்திற்கு சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா் என சுற்றியுள்ள 30 மேற்பட்ட ஊா்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், இந்த மையத்தில் ஆதாா் சம்மந்தாக வரும் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அரசு நிா்ணையத்தை கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் சின்னமனூரில் நகராட்சியில் இயங்கும் ஆதாா் மையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

