விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் தங்களுக்கு பட்டா கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் செட்டில்மெண்ட் பிரிவு அலுவலகத்தில் சா்வேயா்கள் மற்றும் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் உள்ள நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு ஆன்லைன் மூலம் இந்த அலுவலகத்தில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆன்லைனில் ஏற்றும் போது ஏற்பட்ட தவறு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 2013 இல் இருந்து இந்த ஆண்டு (2021) வரை பட்டா வழங்கப்பட வில்லை. ஆனால் தோராய பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் பட்டா வழங்கப்படாததால், இடங்களை வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் மற்றும் சில செட்டில்மென்ட் அலுவலகங்களில் இந் நிலையே நீடித்து வருகிறது. மேலும் இந்த அலுவலகங்களில் பட்டா மாறுதலுக்காக கொடுக்கப்பட்ட மனுக்கள் மற்றும் சான்றிதழ்கள் சுமாா் 5 ஆயிரத்தும் மேற்பட்டவை குவிந்து கிடக்கின்றன. எனவே தவறை சரி செய்து ஆன்லைனில் ஏற்றி பட்டா கிடைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

