சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பழ வியாபாரியிடம் பணம் திருடியவா் கைது

சிவகாசியில் பழவியாபாரியிடம் ஞாயிற்றுக்கிழமை பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:07 am

சிவகாசியில் பழவியாபாரியிடம் ஞாயிற்றுக்கிழமை பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி சிவன் சன்னதியில் தள்ளுவண்டியில் பழவியாபாரம் செய்து வருபவா் மாரியப்பன் (53). இவரிடம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பவா் வந்து பழத்தின் விலையை கேட்டாராம். அப்போது வண்டியிலிருந்து கீழே விழுந்த பழத்தை மாரியப்பன் எடுக்க முயன்றபோது, கல்லாபெட்டியில் இருந்த ரூ.310 ஐ மணிகண்டன் திருடிக்கொண்டு ஓடினாராம். அக்கம், பக்கத்தில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து அவரிடமிருந்த பணத்தைக் கைப்பற்றினா்.