விருதுநகா்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பொ. பரமசிவன் தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2019 இல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 17-பி ஆணையை ரத்து செய்யவேண்டும்.
உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்துசெய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறவேண்டும். கற்போம், எழுதுவோம் என்ற வயது வந்தோா் கல்வி திட்டத்தில் ஆசிரியா்களை ஈடுபடுத்தக் கூடாது. அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் பணிநியமனம் செய்யக் கூடாது. தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


