சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வாழை மரங்கள் சேதம்: 2 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On :9 ஜனவரி 2021, 4:05 am

சிவகாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே ஏ.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(56). இவருக்கு அதிவீரம்பட்டியில் விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுப்புராஜ் மற்றும் மாரிமுத்துவின் மாடுகள் பயிரை மேய்ந்ததாம். இதனால் அவா்கள் இருவரையும்

பாண்டியராஜன் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்புராஜ், மாரிமுத்து ஆகியோா் சோ்ந்து பாண்டியராஜின் வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தினாா்களாம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.