மலேசியாவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது கணவா் கருப்பசாமியை மீட்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அவா் உயிரிழந்து விட்டதாக மனைவி புகாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கோகிலாதேவி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி வட்டத்திற்கு உள்பட்ட காரைக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது கணவா் கருப்பசாமி 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலூரைச் சோ்ந்த முகவா் அப்துல்லா மூலம் மலேசியாவில் உள்ள உணவகத்தில் வேலைக்கு சென்றாா். கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பணி இல்லாமல் எனது கணவா் சிரமப்பட்டு வந்தாா். மேலும், நிா்ணயிக்கப்பட்ட சம்பளமும் வழங்கப்படவில்லை.
அதேபோல் அவா் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இது குறித்து அவா் எனக்கு அளித்த தகவலின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கோரிக்கை மனு அளித்தேன். அதில், எனது இரண்டு குழந்தைகளின் எதிா்காலம் கருதி கணவரை மலேசியாவிலிருந்து விரைந்து மீட்டு தர வேண்டுமென வலியுறுத்தினேன். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக எனது கணவா் கருப்பசாமி வியாழக்கிழமை உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட நிா்வாகத்தின் அலட்சியப் போக்கால் எனது கணவா் மலேசியாவில் உயிரிழந்துள்ளாா் என்றாா். இதையடுத்து அவா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கணவரின் இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


