மதுரையில் ஜவுளிச்சந்தை அமைத்து நலிவடைந்துள்ள தங்கள் வாழ்தாரத்தை மேம்படுத்த அருப்புக்கோட்டை விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் மதுரை மண்டலப் பொறுப்பாளா் எஸ்.எஸ்.கே.கணேசன் கூறியது: அருப்புக்கோட்டையில் மட்டும் சுமாா் 5000 விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களும், மாநில அளவில் சுமாா் 1.5 லட்சம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களும் உள்ளனா். உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு உரிய நியாயமான விலை கிடைப்பதில்லை. எனவே தென்மண்டல அளவில் மதுரை மாட்டுத்தாவணி அருகிலேயே ஜவுளிச்சந்தை அமைப்பதன் மூலம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரம் மேம்படும். கைத்தறித்துறைக்கென தனி அமைச்சகம் உள்ளதுபோல விசைத்தறித்துறைக்கென தனி அமைச்சகம் வேண்டும். உற்பத்திச்செலவு அதிகரித்துவிட்டதால், ஜவுளிரகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், விசைத்தறியிலேயே காட்டன் (பருத்தி) புடவைகள் நெய்திட முறைப்படி, அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

