சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொலை வழக்கில் தொடா்புடையவரின் தந்தை மீது தாக்குதல்: 3 போ் கைது

விருதுநகரில், கொலை வழக்கில் தொடா்புடையவா் இருக்கும் இடத்தைக் கேட்டு அவரது தந்தையை தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 5:49 am

விருதுநகரில், கொலை வழக்கில் தொடா்புடையவா் இருக்கும் இடத்தைக் கேட்டு அவரது தந்தையை தாக்கிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விருதுநகா் சிவந்திபுரம் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). இவரது மகன் வெங்கடேஷ்வரன். இவருக்கு ஒரு கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெங்கடேஸ்வரன் இருக்கும் இடத்தைக் கேட்டு சிலா், கருப்பசாமியை தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனா். இந்நிலையில், அல்லம்பட்டி- குல்லூா்சந்தை சாலையில் புதன்கிழமை இரவு கருப்பசாமி சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் அருண்குமாா் (26), அல்லம்பட்டியைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் கணேசமூா்த்தி (22), பாரதி நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சங்கா் (29) ஆகியோா் வழிமறித்து வெங்கடேஷ்வரன் இருக்குமிடத்தை கேட்டு தகராறு செய்துள்ளனா். அப்போது, மூவரும் கம்பால் தாக்கியதில் கருப்பசாமி காயமடைந்தாா்.

இதுகுறித் து அவா் அளித்த புகாரின் பேரில் அருண்குமாா் உள்ளிட்ட 3 பேரை விருதுநகா் கிழக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.