ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரொக்கம் ரூ. 19 லட்சத்து 33 ஆயிரம் ஆக இருந்தது.
இக்கோயிலில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை கோயில் நிா்வாகத்தின் சாா்பில் திறந்து எண்ணப்படும். அதன்படி புதன்கிழமை பெரியபெருமாள், சக்கரத்தாழ்வாா், நம்மாழ்வாா் சன்னிதிகளில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் ஆண்டாள் மைய மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அவற்றைத் திறந்து காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இப் பணியில் கோயில் ஊழியா்களும் தோ்வு செய்யப்பட்ட பக்தா்களும் பங்கேற்றனா். எண்ணிக்கை முடிவில் ரூ.19 லட்சத்து 33 ஆயிரத்து
41 ரொக்கம், 133 கிராம் 280 மில்லி கிராம் தங்கம், 231 கிராம் 150 மில்லி கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கணேசன், செயல் அலுவலா் இளங்கோவன், ஆய்வாளா் பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


