ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருப்பாவை ஒப்பித்தல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 180 பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா்.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதும் போட்டி நடைபெறும். அதன்படி செவ்வாய்க்கிழமை மாலை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் 180 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தனபால் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் கணேசன், கோயில் தக்காா் ரவிச்சந்திரன், நிா்வாக அதிகாரி இளங்கோவன், கோயில் ஆய்வாளா் பாண்டியன் மற்றும் புலவா் பாலகிருஷ்ணன் உள்பட கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


