பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக்துக்கு இலவச வேட்டி, சேலைகள் செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் அரிசி, சீனி உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதால், அவை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கின.
இது குறித்து வட்டாட்சியா் சரவணன் தெரிவித்தது: பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியும் செவ்வாய்க்கிழமையே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில், பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரை பொருத்தவரை 50,004 பேருக்கு வழங்கப்பட உள்ளது என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


