தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் சேலத்துக்கு அடுத்தபடியாக ருசி மிகுந்த வெல்லம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் விவசாயிகளால் தயாரிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்பை அறுவடை செய்து, வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, மண்டை வெல்லம் மற்றும் மலையாள வெல்லம் என இரண்டு வகையான வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இப்பகுதியில் மண்டை வெல்லத்தை விட மலையாள வெல்லம் என்ற உருண்டை வெல்லமே அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது.
இந்த உருண்டை வெல்லமானது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கேரளத்துக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது, வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்னறனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


