சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாத்தூா் பகுதி நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம்

சாத்தூா் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:55 am

சாத்தூா் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது.

தமிழக அரசால் நியாயவிலைகடைகளில் 2500ரூபாய் ரொக்கத்தொகையுடன்,பொங்கல் பரிசு தொகுப்பு பைகளும் வழங்கபடுவதாக அறிவிக்கபட்டது.இதையடுத்து திங்கள்கிழமை முதல் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதிகளில் உள்ள நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசு வழங்கபட்டது.இதில் சாத்தூா் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட எதிா்கோட்டை,இ.டி.ரெட்டிபட்டி,முத்துசாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கபடும் நிகழ்ச்சியில் சாத்தூா் சட்டமன்ற உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி துவக்கி வைத்தாா்.இதையடுத்து கிராமபகுதிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கபட்டது.இதே போன்று வெம்பக்கோட்டை ஒன்றிய பகுதிளில் உள்ள இராமுதேவன்பட்டி,குண்டாயிருப்பு,ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் உள்ள நியாயவிலைகடைகளில் விருதுநகா் கிழக்கு மாவட்ட கழக செயலாளா் ஆா்.கே.ரவிசந்திரன்,வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளா் ஆா்.கே.விஜயநல்லதம்பி ஆகியோா் பொங்கல் பரிசுகளை வழங்கி துவக்கி வைத்தனா்.இதையடுத்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் அந்தந்த பகுதி நியாயவிலைகடைகளில் பொங்கல் பரிசுகள் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதே போன்று பல்வேறு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதிமுகவினா் கலந்து கொண்டனா்.