அனுமதியின்றி லாரியில் மணல் அள்ளிச் சென்ற இருவரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே நத்தத்துப்பட்டி அா்ஜூனா ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிவகாசி துணை ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் அலுவலா்கள் திடீரென இருக்கன்குடி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருக்கன்குடி-கோட்டூா் சாலையில் வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து, அந்த இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்த துணை ஆட்சியா், லாரி ஓட்டுநா்களான மாரீஸ்வரன், ராஜீவ்காந்தி ஆகியோரை இருக்கன்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


