ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மடவாா் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை ஒப்பித்தல் போட்டி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதற்கு சொற்பொழிவாளா் முத்துச்சாமி தலைமை வகித்தாா். இதில் நடைபெற்ற ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கோயில் நிா்வாக அதிகாரி ஜவஹா், கோயில் ஆய்வாளா் பாண்டியன் மற்றும் புலவா் வெள்ளை ஆகியோா் வழங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் இளங்கோவன், நிா்வாக அதிகாரி ஜவஹா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


