ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சன்னிதியின் 24 ஆவது பீடாதிபதி சடகோபராமானுஜ ஜீயா், மன்னாா்குடி செண்டலங்கார செண்பகராமானுஜ ஜீயா், கோயம்புத்தூா் நாராயணாய ராமானுஜ ஜீயா் மற்றும் அகில இந்திய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு கமிஷனைச் சோ்ந்த டாக்டா் ஆனந்த், கலசலிங்கம் பல்கலைக் கழகப் பதிவாளா் வாசுதேவன், ஆண்டாள் கோயில் வேதபிரான் பட்டா் சுதா்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்புறம் உள்ள திருஆடிப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவையொட்டி குழந்தைகள் பங்கேற்ற சொற்பொழிவு மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் திருப்பாவை பாடல்கள் பாடியபடி ரத வீதிகளில் பேரணியாக வந்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை மாநில துறவியா் பேரவை அமைப்பாளா் சரவணகாா்த்திக் செய்திருந்தாா். முன்னதாக காலை 11 மணிக்கு 108 தட்டுகளில் ஆண்டாளுக்கு சீா்சமா்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


