சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இருசக்கரவாகனம் மோதி சிறுமி படுகாயம்

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்தாா்.

Updated On :3 ஜனவரி 2021, 3:25 am

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்தாா்.

பாலவநத்தம் கிராமம் தெற்குப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன்(39) மகள் மதுதா்ஷிணி (10). இவா் சனிக்கிழமை பிற்பகலில் அப்பகுதி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் குறுக்கே எதிா்பாராதவிதமாக மதுதா்ஷிணி திடீரென சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக அருப்புக்கோட்டைதாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.